தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி சுவாமி ஐயப்பன் திரைப்பட பாடல் வரிகள்..Thedukindra Kangalukkul Oodi Varum Swamy Song - Swamy Ayyappan Movie Song Tamil Lyrics
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள் புரி சுவாமி
கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே - என்மேல்
அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் வடிவிலே
அன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே - நாங்கள்
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
உங்கள் கருத்து : comment