மதுரை அரசாளும் மீனாக்ஷி மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி பாடல் வரிகள்| Madurai Arasalum Meenaakshi Devotional songs Tamil Lyrics
மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி (மதுரை)
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி? (மதுரை)
திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி (மதுரை)
உங்கள் கருத்து : comment